பழிக்குப் பழி!!!!!!!!!!!
ஒருபயங்ங்ங்கரசஸ்பென்ஸ் கதை! நாகம்மை ஆச்சியைப் போல ஒரு நல்ல மனுஷியை நான் பார்த்ததே இல்லை! எல்லோருக்கும் உதவும்பேரன்பிற்கு மறுவடிவம்தான் அவர்! எந்தப் பதவியும் வேண்டாம் என ஒதுங்கிச் சேவைகளை மட்டுமே செய்யும் புண்ணியவதி அவர்கள்! அதனால்தான் அந்த ஊர் மகளிர் மன்றத்தில் கெளரவ ஆலோசகராகப் பல்லாண்டுகள் தொண்டு ஆற்றினார் அவர். என்ன காரணமோ தெரியவில்லை! புதிதாக வந்த மகளிர் சங்கத் தலைவி அவரைப் பதவியிலிருந்து தூக்கி விட்டார்!…
Keep readingகாலத்தின் கோலம்!!!
பயங்ங்ங்கரமான நடப்பியல் சஸ்பென்ஸ் கதை! முக்கண்ணன்: வ. தேனப்பன் இந்தக் காலத்தில் கல்யாணம் பேசி முடிப்பது என்பது ரொம்ம்ம்பவே கஷ்டமாக இருக்கிறது! எனக்குத் தெரிந்த ஒரு பெண், மெத்தப்படித்தவள்! ஜாதகம் பொருத்தமில்லை என்று இதுவரை 250 ஜாதகங்களைத் தூக்கி எறிந்த பிறகு, இனி ஜாதகமே பார்க்கவேண்டாம் என்ற முடிவுக்கு வந்தாள்! நிறம் போதாது; உயரம் பத்தாது; எடை அதிகம்;மூக்குச் சரியில்லை; முகவெட்டு நல்லாயில்லை என்று 300 பேரைத்…
Keep readingவெற்றியின் ரகசியம்!!!
ஞானோதயன்:வ. தேனப்பன் பிரம்ம முகூர்த்தம்என்றே தான்விடி காலையினைச்சொன்னார்கள்!காரணம் என்னஅறிவீரா?கற்பனை சுரக்கும்நேரம் அதே!!! நேற்றையநினைவுச்சூடு எதுவும்நெஞ்சில் இல்லாக்காரணத்தால்குளு குளு குளு குளுகுளுவென்றேகுதூகலமாய்ச்செயல்படலாம்!!! படைப்புத் தெய்வம்பிரம்மனைப் போல்பல சாதனைகள்செய்வதற்குவிடிகாலையிலேஎழுந்து பாரீர்!!!வெற்றிச் சூரியன்நீங்கள் தான்!!!
Keep readingதேவலோகத் திரு அமுது!!!
திவ்யப் பிரபந்தன்:வ.தேனப்பன் கிளி மூக்குமாங்காய் எனக்கிரீடம் சூட்டியது யார்?அந்தக் கீர்த்தியினால்அது என் நெஞ்சைக்கொத்தி அழைத்ததே! மாங்காய்க்கும்வெல்லத்துக்கும்காதல் திருமணம்தடபுடலாய்நடந்ததனால்கடுகு வெடித்ததே!பச்சை மிளகாய் வந்துகைகள் தட்டவேபச்சடி தான்ரெடி என்றாள்எந்தன் மனைவியே! பார்த்தவுடன்காதல் கொள்ளும்பருவப் பெண் போலேஅதுகண்டவுடன்ஆவலினைத்தூண்டலானதே! தொட்டவுடன்விரல்கலெல்லாம்தேன் கூடாய் ஆச்சு!தேவலோகஐஸ் புரூட் இதே!சத்திய வாக்கு!!! “சமைப்பதற்குஇவ்வவ்வளவுநேரமா?” என்றேகோபமுற்றேன்!பச்சடியால்மசிச்சுப்புட்டாளே!!! தேனருவிஇதயமதில்குற்றாலம் ஆகத்திகட்டலையேதேவலோகவெல்லப் பச்சடியே!!!
Keep readingமுதல் இறைவன்!!!
அன்பானந்தன்:வ.தேனப்பன் உலகின் உயர்ந்தரகசியங்கள்ஒருவருக்குமேதெரியவில்லை! ஆனாலும் என்னஎன்றே தான்ரகசியம் காப்போர்சொல்வதில்லை!! இறைவனுக்குஇலக்கணமேஎன்ன என்றுஅறிவீரா?? படைத்தல்காத்தல்அழித்தல் எனமூன்று வேலையும்அவர் செயலே!!! நம்மைப்படைத்தவர்யார் சொல்வீர்?நம்மைக் காப்பதும்யார் என்பீர்? நமக்கு வந்திடும்துன்பங்களைநாளும் அழிப்பவர்யார் சொல்வீர்! உற்பத்தி செய்தவிவசாயியையாரும் உலகில்புகழ்வதில்லை! பாதுகாக்கும்ஐஸ் பெட்டியைப்பல மடங்காகப்புகழ்கின்றோம்! அணுவுக்குள்ளேஅணுவாகஅழகு உருவாக்கியவர்அப்பா தான்! பிள்ளை பெறவேஅம்மா தான்பெருங் கஷ்டப்படுவதைஉலகறியும்! பிரசவ வார்டில்பயத்தாலேமருகும் அப்பாவையார் உணர்வார்? பத்து மாதம்சுமப்பதுவேஅம்மா கடமை!ஆனாலோநித்தம் நித்தம்சுமக்கின்றநிம்மதியற்றவர்அப்பாதான்!!! ஒளிமயமானஎதிர்காலம்பிள்ளைகளுக்குஅமைவதற்காய்த்தன் நிகழ்காலத்தைப்பொசுக்கிக் கொள்ளும்நிரந்தர முதல்வர்அப்பா தான்!!! திருவிழாவில்தான்…
Keep readingகாந்தத்தின் மறு பெயர் கண்ணதாசன்!!!
எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு ஆசை! கவிஞர் கண்ணதாசனைநேரில் சந்தித்து, அவர் எப்படிக் கவிதை எழுதுகிறார் என்பதைமனம் குளிரப் பார்க்க வேண்டும் என்று! நான் மதுரைத் தியாகராசர் கல்லூரியில்எம்.ஏ. படிக்கும் போது துக்ளக் பத்திரிக்கையில் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரைப் போட்டி வைத்தார்கள். “கண்ணதாசனின் திரை இசைப் பாடல்கள் இலக்கியத் தரமானவையா?-ஆய்க!”என்று தலைப்புக் கொடுத்திருந்தார்கள். சிறு வயது முதலே அவரது பாடல்களைச் சேகரித்து வைத்திருந்ததால் அவற்றைத் திரும்பத் திரும்பப்…
Keep readingஉவமை இல்லாப் பேரின்பம்!!!
தமிழ் இனியன்:வ.தேனப்பன் சின்னச் சின்னமுத்தம் தான்சிலிர்க்கச் செய்யுதுநம்மைத்தான்!!! அழகே நீ தான்உருவாகஅஸ்திவாரம் ஒருமுத்தம் தான்!!! கன்னம் போல் ஒருபஞ்சு மிட்டாய்கற் கண்டாகஇனித்திடுமா? வண்ண உதடுகள்கொஞ்சும் சுகத்தைவார்த்தையால் அளக்கமுடியுமோடி???!!!
Keep readingவெற்றிக் கனியை யார் தருவார்?????
வாகையன்:வ. தேனப்பன் காட்டு விலங்குகள்வாழ்விடத்தைக்காணச் சென்றோம்பாதுகாப்பாய்!வேட்டைப் புலி ஒன்றுவிரைந்து வந்துகாட்டெருமையினைக்கவ்வியதே!!! காட்டெருமையதன்வாயினிலேகூரிய பற்களால்கடித்தபடிஆட்டிப் படைத்ததுரத்தம் சொட்ட!!!அதிர்ந்ந்து போனோம்நாங்கள் தான்! கவ்விப் பிடித்தபுலியதனைக்காலால் மிதித்தஎருமை தான்எவ்வி எவ்விமேல் சென்றுஎகிறிக் குதித்தும்பலன் இல்லை!!! கால்கள் நான்கால்எருமை யதன்கர்ப்பமுற்றவயிறு தன்னைமேலாய்க் கடித்துக்குதறியதால்மிகுதியாய் ரத்தம்வடிந்ததுவே!!! தன் நம்பிக்கைஒன்றை மட்டும்தைரியமாகக்கைக் கொண்டதால்சின்னா பின்னம்ஆக்க வந்தசீற்றம் மிக்கபுலியதனைக்கொம்பால் குத்தித்தூக்கியதும்புலிதான் பூனை போல்ஓடியதே!!!!!!!!நம்பிக்கையோடுதுணிந்து வென்றால்……நலமே விளையும்எந்நாளும்!!!!!!!!!!!!!!!!!!!!!!
Keep readingசூரிய யுத்தம்!!!
தலைமை விஞ்ஞானி ராகுலுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை! ஸ்பெக்ட்ரோ ஸ்கோப்பி மூலம் சூரியனை உற்றுப் பார்த்தபோதுதான் அந்தப் பயங்கர உண்மை அவருக்குத் தெரியவந்தது. உலகையே உருக்குலைக்கப்போகும் அந்த அதி பயங்கர உண்மையைக் கேள்விப் பட்டாலே பலர் ஹார்ட் அட்டேக் வந்து……….. என்ன செய்வது என்று சக விஞ்ஞானிகளுடன் கலந்து பேசினார். ” உலகத்துல தோன்றின எல்லாப் பொருளுக்கும் ஒரு முடிவு காலம் உண்டு!அதே ஃபார்முலாப் படி…
Keep readingடைட்டானிக் வாழ்க்கை!!!
பணக்காரர்களின்விளையாட்டிற்குஅளவே இன்றிப்போகிறது! நூறு ஆண்டுக்குமுன்பாகமூழ்கிய கப்பலின்பாகங்களைநீர்மூழ்கிக் கப்பல்மூலமாகநீந்திச் சென்றுகாணப் போனார். கடலுக்குள்ளேசென்றதுமேகாணாமல் போனார்அனைவருமே!இந்த விபரீதவிளையாட்டால்எவ்வ்வ்வளவு கோடிபணம் விரையம்??? மனித உணர்வுகள்குறைந்ததனால்மனிதம் வீணேஅழிந்ததுவே!!! வறுமை என்னும்கடலினிலேவாழ்க்கைப் படகுஉடைந்ததனால்வாடித் தவிக்கும்ஏழையரைஅவர்கள் சென்றுபார்த்தாரா? வாழத் துடிக்கும்மக்களையும்படிக்க ஏங்கும்பிள்ளைகளையும்அவர்கள் கண்டுஉதவியிருந்தால்…ஆனந்தம் கோடிவிளைந்திருக்கும்!!!! பணத்தால் தோன்றும்கொழுப்பு என்றும்பாதுகாப்பைத்தாராது!பணத்தைப் பரிவுடன்பதியமிட்டால்….பல மடங்காகப்பெருகிடுமே!!!!
Keep readingஉண்மையானஊட்டச் சத்துணவு!!!
மாதம் பிறந்த உடனேயேஎங்கள் வீட்டுநிதி அமைச்சர்தோதாய் ஒதுக்கியபணங்களினைஎன்னிடம் கொடுத்துஅனுப்பி வைத்தாள்! “என்னென்ன வாங்கவேண்டும் எனஎழுநூறு முறை நான்யோசித்தேபணத்தை எண்ணித்தந்துள்ளேன்!எதையும் மாற்றிவாங்காதீர்!” என்றாள். கறாரான பெண்மணிக்குக்கணக்காய் வாங்கிவந்தால் தான்வரமாய் வாழ்க்கைஇனிக்கும் எனவாகாய்ச் செலவிட்டுமகிழ்பவன் நான். நேற்றும் அதே போல்பட்டியலுடன்பணத்தை எடுத்துச்சென்றேன் நான். “புத்தகத் திருவிழா!”அழைப்பு என்னைமயக்கி உள்ளேஅழைத்ததனால்கவிச்சக்கரவர்த்திகம்பனவர்மணி மண்டபத்துள்நான் நுழைந்தேன். எத்தனை எத்தனைபதிப்பகங்கள்!எழில்மிகு வாழ்க்கைத்தத்துவங்கள்!!!முத்தெனப் பல நூறுதலைப்புகளில்முழு நிறைவைத் தரும்அதிசயங்கள்! சிறுகதை, நாவல்,கவிதை எனக்கிறுகிறுக்கச் செய்யும்வகையினிலேபெரு நாவலர்கள்எழுதியுள்ளபேரின்பச் சுரங்கம்அங்கு…
Keep readingதிரை விமர்சனம்: “பொன் மகள் வந்தாள்!”
விமர்சகர்:தமிழ்த் தேனீ கொரோனா கலிகாலத்தால்திரையரங்குகள்மூடிக்கிடக்கும் வேளையில், நேரடியாகஇணைய தளத்தின் மூலம் நேற்று வெளிவந்திருக்கும் படம்தான் பொன் மகள்வந்தாள்! ஜோதிகாவின்அற்புதமான நடிப்புத் திறமையை நம்பிச்சூரியா தயாரித்துள்ள படம் இது! வாலி படத்தில் வெறும்அழகுப் பதுமையாக வந்து இளமை துள்ள ஆட்டம்போட்ட ஜோதிகா,இஞ்ச் பை இஞ்சாக வளர்ந்துநடிப்பில் முதிர்ச்சி பெற்றிருக்கிறார் என்பதற்கு இப் படம்மிகச் சிறந்த சான்று! அவர் சொந்தக் குரலில் பேசும் வசனங்களை நன்கு கூர்மை தீட்டியிருக்கிறார் வசனகர்த்தா!…
Keep readingதிரை விமர்சனம்: “பெண் குயின்”
விமர்சகர்:தமிழ்த் தேனீ இணைய தளத்தில் இரண்டாவதாக வெளிவந்துள்ள படம்பெண் குயின்! ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையும்,அதற்கேற்றஉணர்ச்சிப்பூர்வ நடிப்பை வெளிப்படுத்தும் ஒரே ஒரு நடிகையும்,மிகச் சிறந்த சினிமாட்டோகிராபரும்,பயமுறுத்தும் பின்னணி இசையமைப்பாளரும்,நன்கு கதைசொல்லத்தெரிந்த இயக்குநரும்,கூர்மையான எடிட்டரும்,அழகான லொகேஷனும் அமைந்துவிட்டால் போதும்,துணிச்சலாகஒரு படத்தை எடுத்துத் தியேட்டர்களுக்காகக்காத்திருக்காமல் உடனேபடத்தை இணையதளத்தில் வெளியிட்டுப் பெரிய லாபம் பார்த்துவிடலாம் என்பதற்கான சான்றே இந்தப் பெண்குயின்! படத்தை அனைவரும் சுவாரசியம் குறையாமல் பார்க்கவேண்டும் என்பதற்காகக் கதைச் சுருக்கத்தைச்…
Keep readingபக்தியில் பழுக்க ஒரு எளிய வழி!
ஆன்மிகச் சோலை! “பக்தியில்பழுக்கஒருஎளிய வழி!” மெய்யன்பன்வ.தேனப்பன் என் வாழ்க்கையில் நான் படித்த பக்தி நூல்களுள் தலையாயவை இரண்டு! 1.விநாயகர் அகவல்! 2.திருவாசகம்! இத் திருவாசகத்தை மனமுருகிப் படித்தால்தொல்லைமிகுந்த இப்பிறவியில் வரும் தடைகளை எல்லாம் நீக்கும்!துன்பத்தை வரவிடாமல் செய்யும்!ஆனந்தம் தரும்!அதனாலேயே “திருவாசகம் என்னும் தேன்” என்று புகழ்ந்துரைத்தார்கள்! இத் திருவாசகத்தைஇன்று 25-6-2020 வியாழக்கிழமையன்றுமாலை 6 மணி முதல்படிப்பது மிக மிகப் பேரின்பம் தரும்! அவரவர்கள் வீட்டில்விளக்கேற்றித் திருவாசகத்தை மனமுருகிப்…
Keep readingபுதிய சிதம்பர ரகசியம்!!!
கவிதைச் சோலை! “புதியசிதம்பரரகசியம்!!!” கவிஞர் வ.தேனப்பன் மான் ஒன்றுவலை விரிக்கவேடன்வீழ்ந்தேன்! மீன் ஒன்றுதூண்டிலிடமீனவன்சாய்ந்தேன்! மானோடும்மீனோடும்பிறந்த கண்ணாள்மகராசிஎன்னை வளைத்துமாலையிட்டாள்! காளியுடன்சிவன் நடனம்ஆடுதல் போல்கலங்குகிறார்பலர் வீட்டில்!ஆனால் நானோசிவகாமிஆடும் நட(ன)ம்போதும் என்றேசிந்தையினைஅடக்கிச்சிதம்பரமாய்நின்றேன்!!! நிம்மதிதான்நித்தியமும்பரதம் ஆடநீங்களுமேசக்தி மயம்ஆகி மகிழ்வீர்!!!
Keep readingதினம் ஒரு புதூ சுகம்!
கவிதைச் சோலை “தினம்ஒருபுதூசுகம்!” கவிஞர் வ.தேனப்பன் “பொழுது போகவில்லை!” என்றேபுலம்பும்சோம்பேறியா நீங்கள்? “பொழுதுபோதவில்லை!” என்றேபுதுமை தேடும்வீரனா நீங்கள்? இருபத்தி நான்குமணி நேரத்தைஇன்பத் தீவாய்மாற்றுவதும்,வருத்தம் கவலைஎன வீணேவாடித் துன்புறலும்நம் செயலே!!! திட்டமிட்டவாழ்க்கைதான்தெவிட்டாப் பேரின்பம்என்பதனைச்சட்டமாகவேகொள்ளுங்கள்!சரித்திரம் படைப்பீர்விரைவினிலே!!! காலை எழுந்ததும்செல் போனில்கரைந்துபோனால்…ஐஸ்கட்டி நீ!மேலாய் வாழ்வில்முன்னேறத்தினமும் படித்தால்ஆக்ஸிஜன் நீ!!! புத்தகம் பலவாய்ப்படித்தாலேபுத்தனாய் ஆகலாம்நீயும்தான்!வித்தகமாக வாழ்வுயரவிரும்பிப் படிப்பாய்பல நூலை!!! உன்னை வளர்த்துப்பாதுகாக்கும்உயர்வு மிகுந்தபுது வீடென்றேஅன்பாய்ப் புத்தகம்எனச் சொன்னார்!அறிஞர்அண்ணா போல்படித்து உயர்க!!! பாதம் முதலாய்நெற்றி வரைபார்க்கப்…
Keep readingஅவர் வருவாரா?
ஆன்மிகச் சோலை “அவர்வருவாரா?” உண்மைவிளம்பி:வ.தேனப்பன் “மாணிக்கவாசகருடைய குருபூஜை நாளைக்கு வருது!அன்னைக்கி நீங்க திருவாசகம் முற்றோதுதல் வைச்சா ரொம்பநல்லா இருக்கும்!” என்றார் என் குருநாதர்! “நாளைக்கா?இந்தக் கொரோனா நேரத்தில யாராவது வருவாங்களா?” என்று கேட்டேன். “நம்ம ஊர்லயே இருபதுமாணிக்கவாசகர்மன்றங்கள் இருக்கு!போன் நம்பர் தாரேன்!கூப்பிடு!உடனே வாரேன்றுவா!”என்றார். எனக்கும் ரொம்ப நாளாகவே இந்த ஆசையிருந்ததால்வரிசையாக போன் செய்தேன்!தலைவர் வந்தால்தான் செயலர்வருவாராம்!அவர் வந்தால்தான் மற்றவர்கள் வருவார்களாம்!என்ன செய்வது எனத் தெரியவில்லை! குருவை நேரில்…
Keep readingமருந்தில்லா நோய்க்குமருந்து கண்டுபிடிச்சாச்சு!
கவிதைச் சோலை! “மருந்தில்லா நோய்க்குமருந்து கண்டுபிடிச்சாச்சு!” கவிஞர் வ.தேனப்பன் உலகமெல்லாம் பரவிஐந்து லெட்சம் உயிர்களினைக்களவாடிய கொரோனாலைக்காலனிடம்அனுப்பிவைப்போம்! ஜலதோஷம் போலவேசகலருக்கும் வருகின்றகலக்கம் தரும் நோயேகொரோனா என்றறிவோம்! ஊட்டமிகுஉணவு உண்டுமன உறுதியோடிருந்தால்பாதிக்காதுஎந் நோயும்!பயமின்றித் துணிந்திருப்போம்!!! வயதால் மூத்தோரைவயதில் சிறியவரைபயத்தால் மிரண்டோரைமட்டுமே தாக்கிடுமே!! எதிர்ப்பு சக்தியொன்றேநமக்கு வரமாகும்!புதிரான கொரோனாவைப்புறம்காணச் செய்துவிடும்!!! ஊட்டமிகு உணவுகளேஉயர்வான மருந்தாகும்!ஆடா தோடை,இஞ்சி,வெள்ளைப்பூண்டு அருமருந்து! மனதில் தைரியத்தைமலைபோலவளரச்செய்வீர்!தினமும் நுரையீரலைத்தியானத்தால்உறுதி செய்வீர்!!! வங்கக் கடல் போலவளர் பயத்தைவிரட்டிடுக!!உங்களது நம்பிக்கையேஉயிர் காக்கும்கவசமாகும்!!!
Keep readingஇருட்டுக்குள் ஒரு வெளிச்சம்!
கவிதைப் பாலை! “இருட்டுக்குள்ஒருவெளிச்சம்!” கவிஞர் வ.தேனப்பன் அமைதிக் குளத்தைஅராஜகச் செயலால்ரத்தக்குளமாக்கினர்சில சாத்தான்கள்! அழிக்க முடியாத்தடயங்களையெல்லாம்அழித்துத் துடைத்தபின்னர்அம்பலத்துக்குப்பொய்த் தகவலைப்பதிவு செய்தனர்! நீதி தேவதைக்குமூன்று கண்கள்! இரண்டைநாம்மூடிவிட்டால்…மூன்றாவது கண்தானாகவே திறந்துகொள்ளும்!!! ஒரு சத்திய தேவதைஅக் கண்ணில்வெளிப்பட்டாள்! அவள் ஒருஅழிக்கமுடியாதசி சி டி விகேமிரா! கேமிராக்கள்எப்போதுமேஅரிச்சந்திரனின்வாரிசுகள்தானே?! உண்மைப் படங்கள்இனிஉலகை உலுக்கும்! நீதிக்கு முன்னால்யாவரும் சமமே! நாளைஇன்னும்சூடான செய்திகள்கிடைக்கும்!!! குளத்த்தைக்கலக்கியவர்கள்விரைவில்கதி கலங்குவார்கள்! எப்படிஎன் தீர்க்க தரிசனம்எனில்…விதைத்ததுதானேமுளைக்கும்?! தர்ம தேவதையின்நெற்றிக்கண்ணிலிருந்துவந்தசூடானதீப் பொறியின்பெயர்தான்ரேவதீ!!!
Keep readingஆயுள் சுரபி!
இரண்டு நிமிட நிஜம்! “ஆயுள் சுரபி!” நேர்முகம்:வ.தேனப்பன் என் கண்களைஎன்னால் நம்ப முடியவில்லை! சென்ற மாதம்கை ரேகை பார்க்கத்தட்டுண்டு தடுமாறித்தள்ளாடி நடந்துவந்தகாளையப்பனா,இன்று ஒரு ராணுவ வீரனைப்போலநடந்துவருவது? காளையப்பனும் அவர் மனைவி கீதாவும் சென்ற மாதம் மிகுந்த மனவருத்தத்துடன் வந்தது ஞாபத்துக்கு வந்தது! “இவருக்கு ஆயுள் கூடவும் நிம்மதி கிடைக்கவும் என்னபண்ணனும்?” என்றுகேட்டாள் கீதா. “ஆயுள்ங்கிறது நாமா வளர்த்துக்கிறதுதான்!அறுபது வயசு வரைநல்லா சாப்பிட்டா உடம்பும்,அதுனால உசுரும் வளரும்!” “அறுபதுக்கு…
Keep readingஎவர் கிரீன் போனஸ்!
இரண்டு நிமிட சுகானுபவம்! “எவர் கிரீன்போனஸ்!” நேர்முகம்:வ.தேனப்பன் ஒவ்வொருவர் மனசுக்குள்ளும்தினசரி விடாமல் மஹாபாரதப்போர்நடந்துகொண்டிருக்கும்ஜி எஸ் டி காலத்திலும்ஒரு குடும்பம் மட்டும்தினசரி ஆனந்தத்தில் மிதந்துகொண்டிருக்கிறது!அது எப்படி சாத்தியம் என்று அறிய அவர்கள் வீட்டுக்குச் சென்றேன்! எவர் கிரீன் ஷாப்பிங் மால் ஒன்றை பிரம்மாண்டமாக நிறுவி அதன் அருகிலேயே அண்ணன் தம்பிகள்அனைவரும் வீடு கட்டிச்சுகமாக வாழ்ந்து வருகிறார்கள்! நாரத ரூபக் கோள் மூட்டிகள் கூட அவர்களுக்குள் கசமுசாவைக் கொண்டுவர முடியாது!காரணம்,எல்லா…
Keep readingகேள்விகளால் ஒரு வேள்வி!”
இரண்டு நிமிடச் சிந்தனை! “கேள்விகளால்ஒருவேள்வி!” நேர்முகம்:வ.தேனப்பன் இந்த தீபாவளிக்கு என்னென்ன செய்வது?எப்படிச் செய்வது?யாரைக் கூட்டிச் செய்வது? வருஷா வருஷம்அறிந்தவர்கள்,தெரிந்தவர்களுக்கெல்லாம்இனிப்பும் காரமுமாக வீட்டிலேயே செய்துகொடுத்தது போல இந்த வருஷம் செய்ய முடியாது போலிருக்கே! மூட்டு வலி நடக்கவிடவில்லை!தோள் வலிசமைக்கவிடவில்லை!! ஆள்களைக் கூட்டித் தயாரிப்பதற்குப்பெரும் சம்பளம்கொடுக்கவேண்டும்போலிருக்கிறதே! என்ன செய்யலாம்? விலை வாசி ராக்கெட் வேகத்தில் ஏறிய பிறகுஇந்தப் பரிவர்த்தனைவெகுவாகவே குறைந்துவிட்டது!அதனால் உடம்புக்கு முடியவில்லை என்றகாரணத்தால் இதை நிறுத்திவிடுவோமா?என்று தீவிரமாக யோசித்தார்…
Keep readingமறு பக்கம் பார்க்கவும்!
இரண்டு நிமிட நிஜம் “மறு பக்கம்பார்க்கவும்!” நேர்முகம்:வ.தேனப்பன் கார்த்திகை மாதசோம வாரத்தில்ஏழை எளியவர்களுக்குஅன்னதானம் செய்தால்குன்றக்குடி முருகன் அருளால்,குடும்பம்குன்றாக் குடியாக வளர்ந்தோங்கும் என்பார் எங்கள் அப்பத்தாள் திருமதிநாச்சம்மை ஆச்சி! அவர்கள் சொற்படி ஆண்டாண்டுதோறும்கீழச்சிவல்பட்டியார்நகர விடுதியில் வடித்துப் போடுவது எங்கள் வழக்கம்! அன்னதானத்திற்கு எங்கள் சுற்றத்தாரெல்லாம் அவரவர்களால் இயன்ற தொகையைத் தருவார்கள்!அதைக் கொண்டு அன்னதானத்திற்கு வேண்டிய அனைத்துப்பொருட்களையும் வாங்கிக்கொண்டுபோய்க் கொடுப்போம்! முதல் நாளே அவற்றைக்கொடுக்கச் சென்றபோது,”காய் கறிகளை நறுக்கிக்கொடுத்தால்மேலும் புண்ணியம்…
Keep readingரகசியக் கொண்டாட்டம்!
இரண்டு நிமிடக் கதை! “ரகசியக்கொண்டாட்டம்!” கதைஞர்:வ.தேனப்பன் நெடுநாள் ஆசையை அந்த ஏக்கப் பெருமூச்சு வெளிப்படுத்தியது! பக்கா பிளான்! யாருக்கும் தெரியாது!இந்த முறை தடையே வராது!சிம்லாவில்கல்யாண நாளை ஜாம்ஜாமென்று கொண்டாடுவதற்காகஇஞ்சினியர் ராமு டெல்லி ஏர் போர்ட்வந்ததும் மனைவி மதுமதிக்குப் போன் செய்தார்! “நானும் டயத்துக்குத் திருச்சி ஏர் போர்ட் வந்துட்டேன்!சென்னை வந்து,டெல்லிக்கு உடனே பிளைட் எடுத்து வந்தர்றேன்!இருபது வருஷமா நாம ஆசைப்பட்டதை நாளைக்கு அனுபவிப்போம்!” என்றாள் மதுமதி! மூன்று…
Keep readingநெடு நாள் தவம்!
இரண்டு நிமிட நிஜம்! “நெடு நாள்தவம்!” கதைஞர்:வ.தேனப்பன் “உங்க வாழ்க்கையும்உங்களால மத்தவங்க வாழ்க்கையும் ரொம்பநல்லா இருக்கணும்னாஇந்தக் காட்டுல ஒருஇடத்தை வாங்கி ஒரு கோயில்,தியான மண்டபம்,வீடு கட்டுங்க!நீங்க ஓஹோன்னு வருவீங்க!” என்றார் ஒருஉண்மையான சாமியார்! காரணம் அந்த இடத்தில்தான் அர்ஜுனன் தவம் செய்து, பாசுபதா அஸ்திரம் பெற்று, மஹா பாரதப் போரில் ஜெயித்திருக்கிறான்!பஞ்ச பாண்டவர்களும் ஆயிரக் கணக்கான முனிவர்களும் தவம் செய்திருக்கிறார்கள் என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகளும் கிடைத்ததால்,அறுபதுபாம்புப் புற்றுகள்…
Keep readingகலைந்து போகும் மேகங்கள்!
இரண்டு நிமிடக் கதை கலைந்து போகும்மேகங்கள்! கதைஞர்:வ.தேனப்பன் வணங்காமுடி என்ற பெயருக்கு ஏற்றார்போலவே நடந்துகொண்டான் அவன்! வந்தவளும் பத்திரகாளிதான் என்பதால் தினசரிருத்ரதாண்டவம்தான் வீட்டில்! அவனும் குடும்பத்துக்கு ஒரேஒரு பிள்ளையாகப்பிறந்தவன்!அவளும் அப்படியே!செல்லமாய் இருவரும் வளர்ந்து,நினைத்ததையெல்லாம் இதுநாள்வரை சாதித்ததால்,இப்போது தினசரி டக்அப் வார்தான்! சேர்ந்துவாழ முடியாது என்று இருவரும் தீர்மானித்து மியூச்சுவல் டைவர்சுக்கு அப்ளை செய்தார்கள்! நீதிபதி என்ன கசாப்புக்கடைக்காரனா?உடனே வெட்டிவிட! கவுன்சிலிங்கில் ஆறு மாதம் பிரிந்திருந்த பிறகு வாருங்கள்!என்றுசொல்லிவிட்டார்!…
Keep readingபரமபத தர்பார்!
இரண்டு நிமிடச் சிந்தனை பரமபததர்பார்! உருவகக் கதைஞர்:வ.தேனப்பன் உலகமே விரலின் மேல்மூக்கை வைத்துப் பெருமூச்சுவிட்டபடிஅதிசயித்துப் பார்த்துச்சிரித்துக்கொண்டிருந்தது!!! அப்படி என்னதான் அதிசயம் என்று கேட்கிறீர்களா?வாருங்கள்,பிந்திய நாட்டுக்குப்போவோம்!!! இங்குள்ள எல்லா மாநிலங்களும்ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை! எப்பேர்ப்பட்ட அதிமேதாவிபொருளாதார வல்லுநர்களோமஹாப் பெரிய ஜோதிடர்களோ கூடநாளைய அரசியல் எப்படி இருக்குமென்றுதீர்க்கதரிசனமாகச் சொல்லவே முடியாது! அதிலும் குறிப்பாககிராட்டிய மாநிலத்தைப்பற்றிக் கடவுளாலும் தீர்மானமாகச் சொல்லமுடியவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! மாநிலத் தேர்தலில்ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியும் கூட்டணி அமைத்து…
Keep readingசாப விமோசனத் தீர்ப்பு!
இரண்டு நிமிடச் சிந்தனை! சாபவிமோசனத்தீர்ப்பு புராணக் கற்பனைக்கதைஞர்:வ.தேனப்பன் பெருமூச்சுக்களாலேயேபல வருடம் கல்லாகக் கிடந்த அகலிகை ஒருபெரிய தவம் செய்வதுபோல உணர்ந்து,அந்த சாப விமோசன நாளுக்காகக்காத்திருந்தாள்,ஒரு பயங்கரமான முடிவுடன்! அவள் ஆத்திரத்தோடு எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது! கௌதம முனிவரின் சாபத்தால் கல்லாகிப்போனவள்ஸ்ரீ ராமரின் கால் தூசி பட்டதும், ஒரு அழகிய பெண்ணோவியமாக எழுந்தாள்! கௌதமர் மிக மிக ஆவலுடன் “பிரிய சகீ!” என்று அழைக்கும் முன்பாக,அவள்,”என் பிரான…
Keep readingஉள்ளுக்குள்ளே ஒருநெருப்பூ!
இரண்டு நிமிடகிரைம் ஸ்டோரி “உள்ளுக்குள்ளேஒருநெருப்பூ!”” கதைவிதைஞர்:வ.தேனப்பன் பூங்காகசங்கிப்போனது! ஐந்து நிமிடத்திற்கு முன்அழகுச் சோலையாக மின்னிய பாரதி பூங்காஇப்போது…பூச்செடிகள் ஒடிந்து தொங்க,அழகுச் சிலைகளெல்லாம் அலங்கோலமாய் உடைந்துகிடக்க ஒரு ரணகளமாய்ப்புற்களெல்லாம் ரத்தம் சொட்டச் சொட்டப் பயங்கரமாகக்காட்சியளித்தது! பாரதி பூங்காவின் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமோ? பாரதியாரின் மிகச் சிறந்த பாடல்கள் தொடர்ந்து நம்மை வீணையாக்கி இன்ப இசையினை மீட்டிக்கொண்டே இருக்கும்! “நீ எனது இன்னுயிர்க் கண்ணம்மா!எந்த நேரமும் உன் மடி தேடுவேன்!”என்ற…
Keep readingஅந்தரங்கம் மணக்கிறது!
இரண்டு நிமிடக்காதல் கதை! “அந்தரங்கம்மணக்கிறது!” இதயன்:வ.தேனப்பன் “நீங்க சைகாலஜி படிச்சவர்தானே மாமா?அதுனாலதான் என்னோட மனைவியைசெலக்ட் பண்ற பொறுப்பை,உங்க கிட்டே தாரேன்!இந்த ஆல்பத்துல ஆறு பொண்ணுங்க படமும்பயோ டேட்டாவும் இருக்கு!நான் எம்.எஸ்.முடிச்சு அமெரிக்காவில கைகுளிரச் சம்பாதிக்கிறேன்!எனக்கேத்த பொண்ணை நீங்கதான் செலக்ட் பண்ணித் தரணும்!ப்ளீஸ்…சூப்பரா செலக்ட் பண்ணுங்க மாமா!”என்றான் மணிவண்ணன்! ஆல்பத்தைப் புரட்டினார் மாமா. “நீ சினிமாவா எடுக்கப்போறே?ஏதோ கதாநாயகியை செலக்ட் பண்றமாதிரி ஓவர் மேக்கப்காரிகள் படமாஇருக்கூ?உன் சம்பளம் மொத்தமும்…
Keep readingஒரு மாமரம் தேங்காய் காய்க்கிறது!
இரண்டு நிமிடவிழிப்புணர்வுக் கதை “ஒருமாமரம்தேங்காய்காய்க்கிறது!” மொபைல்கதைஞர்:வ.தேனப்பன் என்ன செய்வது என்றுஎனக்கு ஒன்றும் புரியவில்லை! சொன்னதையெல்லாம்கேட்டு,அப்படியே இம்மி பிசகாமல் செய்யும் புதுப் பெண்டாட்டியைப்போல்சொன்னதற்கெல்லாம் உதவிய என் செல்போன் இன்று காலை முதல் சண்டிக்குதிரை ஆகிவிட்டது!ஒரு நேரம் ஓடுகிறது!மறு நேரம் படுத்துவிடுகிறது!!! டைப் அடி! என்றால்தப்படிக்கிறது! கூகுளுக்குள் போ! என்றால் யூ டியூப்பிற்குள் வாலாட்டுகிறது! நெட்டில்லை என்கிறது!துட்டில்லை என்கிறது!!! நேற்றுத்தான் டாப் அப் பண்ணினேன்!போட்ட பணம் உப்பாய்க் கரைகிறது! கால்குலேட்டர்…
Keep readingநிறை குடம் தழும்பாது!!!
வீடே மணமணத்தது! பிறந்த நாள் விழாவின்ஹை லைட்டே அந்தவெஜிடபிள் பிரியாணிதான் என்றுஅனைவரும் பாராட்டினார்கள்! “என் வாழ்நாள்ல இப்படி ஒரு செம டேஸ்ட்டான பிரியாணியை நான் சாப்பிட்டதே இல்லே!இவ்வளவு பிரமாதமா அமைய யார் காரணம்?”என்று கேட்டார் தாத்தா. “நான்தான்பா காரணம்!சாதா பச்சரிசியிலதான் முதல்ல போடலாம்னு சொன்னாங்க!நான்தான் உடனே காரெடுத்துக்கிட்டுப்போயி இந்தியா கேட் பாஸ்மதி ரைஸ் வாங்கியாந்து கொடுத்தேன்!அதுனாலதான் சூப்பரா மணக்குது!” என்றார் அப்பா! “அது ஒண்ணும் காரணமில்லே!மணக்கிறதுக்குக் காரணமே…
Keep readingநடக்கும் நங்கூரம்!!!
இரண்டு நிமிடத்தன்நம்பிக்கைக் கதை! நடக்கும்நங்கூரம்!!! மாலுமி:வ.தேனப்பன் விஜய் படத்துக்குப்பஞ்ச் டைலாக் எழுதமுழுத்தகுதியும் பெற்றவர்நம் வில்லன் நம்பியார்!இதுவரை அவர் யாரையும்ஒரு துளிகூட நம்பியதும் கிடையாது!அவர் கிழித்த கோட்டை நம்மால் தைக்கவும் முடியாது! இன்றுவரை எல் ஐ சி,ஜனதா,லொட்டு,லொசுக்கு என்று எத்தனையோ இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுகள் வந்துவண்டி வண்டியாய்ப் பேசியும்,ஒரு பாலிசிகூடஇதுவரைப் போடச்செய்யமுடியவில்லை! “எனக்குன்னு ஒரு தனீ பாலிசி இருக்கு!” “என்னாது?” “எந்தப் பாலிசியும்எடுக்கிறதில்லேங்கிறதுதான்!” இப்படி முகத்தில் அடித்தாற்போல் சொன்னதும், எல்லா…
Keep readingஒளிவதற்கு இடமில்லை!
இரண்டு நிமிடமந்திரவாதிக் கதை! “ஒளிவதற்குஇடமில்லை!” டெலஸ்கோப்கதைஞர்:வ.தேனப்பன் எமகாதகன் என்ற பெயர் அவனுக்கு மட்டுமே 100% பொருந்தும்! எத்தனை சட்டங்கள் போட்டாலும்,அதில் உள்ள விட்டங்களை உடைத்துக்கொண்டு நழுவிவிடுவான்! அப்படித்தான் இப்போதும் நடந்திருக்கிறது! நித்திய சத்யானந்தா என்று குரு அவனுக்கு இட்ட பெயரைச்சொன்னால்யாருக்கும் தெரியாது!நித்திய சச்சரவானந்தா என்றால் மட்டுமே எல்லோருக்கும் உடனே புரியும்! காமத்தை எரிப்பது எப்படி என்று நடுஜாமயாகம் நடத்தி,அதிலேயேதினசரி குளிப்பவன்அவன்! எல்லாச் சட்டங்களையும்தூள் தூளாக்கிவிட்டுக் கைது செய்யப்போகும்போதுவெளிநாட்டுக்குத்…
Keep readingசெம ஈஸி 100+
இரண்டு நிமிடஆரோக்கியச் சிந்தனை! “செம ஈஸி100+” வைட்டமின்கதாசிரியர்:வ.தேனப்பன் என்னால நம்பவே முடியலே! “பொறந்த நாள் கொண்டாடுறோம்! வாங்க!”ன்னாங்க! புதுசாக் குடிவந்த எதிர்வீட்டுப் பாப்பாவுக்குத்தான் பொறந்த நாளாக்கும்னுநெனைச்சுக்கிட்டுப்போனா…அதோட கொள்ளுத் தாத்தாவுக்கு 108 ஆவதுபொறந்த நாளுங்கிறாய்ங்க!!! சரி!அந்தக் குடு குடு கிழவனைச் சேர்ல உக்காரவைச்சு குளுகோஸ் பாட்டில்,யூரினல் பேக்கோட ஒரு பார்சல் மாதிரித் தூக்கியாரப் போறாய்ங்கன்னு பாத்தா…மஞ்சவெரட்டுக்காளை மாதிரி,அவரே ஒரு மிலிட்ரி மேஜர் கணக்கா,கெம்பீரமாடக்கு டக்குன்னு நடந்து வந்தாரு! தாத்தா…
Keep readingஏவு கணைகள் இடையில்நிற்பதில்லை!!!
இரண்டு நிமிடநவ நாகரீகக் கதை! “ஏவு கணைகள்இடையில்நிற்பதில்லை!!!” ஃபேஷன்கிரியேட்டர்:வ.தேனப்பன் எந்த ராத்திரிக்கும் இல்லாத தனீ சுக மவுசுசனிக்கிழமை ராத்திரிக்கு மட்டும் உண்டு!!! ஐதராபாத்தில் பகலை விட,சனிக்கிழமை ராத்திரிதான் அதிக வெளிச்சத்துடன் ஜொலிப்பதைப் பார்த்து வியந்தாள் கண்ணாத்தாள்! சென்னை,பெங்களூரில்பணிசெய்தபிறகு, இப்போது பதவி உயர்வுபெற்று இங்கு வந்ததில் அவளுக்குப்பெரும் மகிழ்ச்சி! அவளது ரூம் மெட் சஞ்சனா அதிக மேக்கப்புடன் நைட் கிளப்பிற்குப் புறப்பட்டாள்! “எனக்குக் கம்பெனி கொடுக்கிறதுக்காகஇன்னைக்கி மட்டும்ஒரே ஒருநாள்…
Keep readingஏவு கணைகள் இடையில்நிற்பதில்லை!!!
இரண்டு நிமிடநவ நாகரீகக் கதை! “ஏவு கணைகள்இடையில்நிற்பதில்லை!!!” ஃபேஷன்கிரியேட்டர்:வ.தேனப்பன் எந்த ராத்திரிக்கும் இல்லாத தனீ சுக மவுசுசனிக்கிழமை ராத்திரிக்கு மட்டும் உண்டு!!! ஐதராபாத்தில் பகலை விட,சனிக்கிழமை ராத்திரிதான் அதிக வெளிச்சத்துடன் ஜொலிப்பதைப் பார்த்து வியந்தாள் கண்ணாத்தாள்! சென்னை,பெங்களூரில்பணிசெய்தபிறகு, இப்போது பதவி உயர்வுபெற்று இங்கு வந்ததில் அவளுக்குப்பெரும் மகிழ்ச்சி! அவளது ரூம் மெட் சஞ்சனா அதிக மேக்கப்புடன் நைட் கிளப்பிற்குப் புறப்பட்டாள்! “எனக்குக் கம்பெனி கொடுக்கிறதுக்காகஇன்னைக்கி மட்டும்ஒரே ஒருநாள்…
Keep readingநெருப்பில் நீந்தும் நிலவு!
இரண்டு நிமிடத்தந்திரக் கதை! “நெருப்பில்நீந்தும்நிலவு!” கதைஞர்:வ.தேனப்பன் வசமாக மாட்டிக்கொண்டாள்பூர்ணிமா! சுடுகாட்டின் அருகேநடுராத்திரி பனிரெண்டு மணிக்குக் கார் டயர்பஞ்சரானாலும் துணிச்சலாக அவளேஸ்டெப்னியை மாட்டி முடிக்கும் நேரத்தில்நான்கு போதையர்கள் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கினார்கள்! “டேய்!அழகான மொசக்குட்டி தானா வந்து நம்ம வலையிலவிழுந்துடுச்சுடா!இன்னைக்கி நமக்கு இருக்க வெறிக்குச் செம தீனி கிடைச்சிருச்சுடா!”என்றான் ஒரு மன்மதன்! “இந்த ரோஜாவைக் கசக்கித் தடயமில்லாமஎரியவிடுறதுக்குத் தோதாச் சுடுகாட்டுலயாருமே இல்லேடா!அங்கே எரிஞ்சுக்கிட்டிருக்க பொணத்தோட இந்தப்பஞ்சவர்ணக்கிளியையும்…
Keep readingஆயுள் தீபம்!
இரண்டு நிமிடஆன்மிகக் கதை “ஆயுள்தீபம்!” அகல் விளக்கு:வ.தேனப்பன் ஊர் முழுவதும்ஒளிமயமாகச்சுடர்விட்டுப் பிரகாசித்தது! ஒவ்வொரு வீட்டிலும்கார்த்திகைத் தீபத்தைக்கிளியஞ் சிட்டிகளில்வரிசையாக ஏற்றிக்கொண்டிருந்தனர்! நெடுநேரமாகியும் எதிர்வீட்டில் ஏற்றிவைத்த தீபங்கள்அணையாமல் எரிந்துகொண்டிருந்ததைப் பார்த்த சிகப்பிக்குஅழுகைதான் வந்தது! “ஏன் பாட்டி என்னோட விளக்குமட்டும் சீக்கிரமே அணைஞ்சிடுச்சூ?கடவுளுக்கும் பாரபட்சம்இருக்குமோ?என்னோட அப்பாவையும் ஆக்சிடெண்ட்ல பழி வாங்கீட்டாரு!ஏம்பாட்டி அவருக்கு இந்த ஓரவஞ்சனை?” என்றுசூடாகக் கேட்டாள்! நாச்சம்மைப் பாட்டி ஆயாள் பக்தியில் பழுத்த பழம் என்பதால்பொறுமையாகப் பதில் சொன்னாள்! “எதிர்…
Keep readingபார்த்தீனியப் பூக்கள்!
இரண்டு நிமிடநடப்பியல் கதை! “பார்த்தீனியப்பூக்கள்!” சென்சிடிவ்கதைஞர்:வ.தேனப்பன் “எங்க அம்மாவைக் காப்பாத்தவே முடியாதா டாக்டர்?”என்று கேட்கும்போதே சிவகுமாரின் நெஞ்சின் வெடிப்புகள் ரணமாகத் தெரிந்தன! பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இரண்டுமாத ட்ரீட்மெண்ட் முடிந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்த பாசக்கார மகன் கேட்ட கேள்விதான் அது! காயத்ரி ஜன்னலையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்!அவளது பார்வையில் சந்தேகத் தேடல் இருந்தது!பகலிலும் சரி,இரவிலும் சரி,நிம்மதியாகத் தூங்காததால் வந்தமன உளைச்சல்தான் இப்படி இவளைப் பைத்தியக்காரி ஆக்கிவிட்டது! முதியோர் இல்லத்தில்…
Keep readingயாருக்கும் தெரியாத பரம ரகசியம்!
இரண்டு நிமிடசஸ்பென்ஸ் கதை! “யாருக்கும்தெரியாதபரம ரகசியம்!” டிடெக்டிவ்சி ஐ டி:வ.தேனப்பன் எந்த ஆஸ்பத்திரிக்கும் இல்லாத பெரும் கூட்டம்அந்த ஆஸ்பத்திரியில்அலை மோதியது! டாக்டர் ஜெகத்ரட்சகன்பெரியாஸ்பத்திரியில்சீனியர் டாக்டரென்றாலும்,இந்தப் புறநகர் ஆஸ்பத்திரி வருமானம்தான் அள்ளிச் சொரிகிறது! இரண்டு வருஷத்துக்குமுன்,மாலை ஏழு மணியிலிருந்து ஒன்பது மணிவரை தேமே என்றுகாத்துக்கிடந்து, நாலு நோயாளிகளைப் பார்ப்பதற்கே தவம் கிடந்தவர் ,இன்று ,மூச்சுவிட நேரமில்லாமல் நூறு பேருக்குமேல் வைத்தியம் பார்க்கிறார்!இப்போது இது 24 மணிநேர ஹாஸ்பிடல் ஆகிவிட்டது!…
Keep readingபத்மாசுர சம்ஹாரம்!
இரண்டு நிமிடக்குளுகுளுப்புக் கதை! “பத்மாசுரசம்ஹாரம்!” கூலர்:வ.தேனப்பன் போன் அலறியது! “சனியன்புடிச்ச இது வந்ததிலேருந்து,போன் பேசுறதே பொழப்பாப் போச்சு!எந்தப் பாடாவதிப் பய பேசுறானோ தெரியலையே!”என்றுசலித்தபடி போனை எடுத்தார் காடப்பன்! “ஹல்லோ!நான் யாரு தெரியுதா?” என்று கேலியாகச் சிரித்தபடிஒரு குரல் கேட்டது! “குரலைக்கேட்டவுடனே கண்டுபிடிக்க, நீ என்னடி எம் எஸ்ஸா?இல்லே ஜேசுதாசா?யாரு(டா) நீ?” “என்னை எப்புடிடா நீ மறந்தே?உன் குரல் எனக்குள்ளே பசுமரத்து ஆணியாப் பதிஞ்சிருக்கேடா!” “நீ யாருடா நாயே?அத…
Keep readingமனமே ஒரு அமுதசுரபி!
இரண்டு நிமிடஉண்மைக் கதை! “மனமேஒருஅமுதசுரபி!” செய்திக் கதைஞர்:வ.தேனப்பன் நாட்களைஎண்ணிக்கொண்டிருந்த ஒரு முதியவர்,டாக்டர்வி.எஸ்.நடராஜன் என்னும் பிரபல மருத்துவரிடம் வந்தார்! “துணைக்கு யாராவது வந்திருக்காங்களா பெரியவரே?”என்று அன்போடு கேட்டார் டாக்டர். “எனக்குத் துணை,நான் மட்டும்தான்!எனக்கு உதவ யாருமில்லே ஐயா!” “உங்க மன தைரியத்தை நான் பாராட்டுறேன்!உங்களுக்கு இப்ப என்ன வயசாகுது?என்ன பிரச்சனை உங்களுக்கு?” “எனக்கொன்னும் ரொம்ப வயசாயிடலேய்யா!82 தான் நடக்குது! ரொம்ப நாளா எனக்கு வயிறு வலிச்சுக்கிட்டே இருக்குய்யா!எங்க ஊரு…
Keep readingமாப்பூ! வைச்சிட்டாண்டாஆப்பூ!!!
இரண்டு நிமிடநடப்பியல் தொழில் முன்னேற்றக் கதை! “மாப்பூ!வைச்சிட்டாண்டாஆப்பூ!!!” நகைமுகன்:வ.தேனப்பன் “மாப்பூ! உடனே ஒன்னோட ராயல் என்பீல்டுல தெப்பக்குளத்துக்கு வாடா! யாரோ ஒரு பணக்காரி அஞ்சுசெயின் போட்டுக்கிட்டு,அசால்ட்டா நடந்துபோய்க்கிட்டிருக்காடா! சீக்கிரம் வா! நேத்தைக்கி மாதிரி ஒடனே வித்துடுவோம்! கட் பண்றேன்!ஓவர்!!”என்று போனை வைத்தது ஒரு குரல்! செம தூக்கத்திலிருந்த கோவாலு பேந்தப் பேந்த முழித்தபடி கெடிகாரத்தைப் பார்த்தான்!மணி விடிகாலை ஐந்து! ஒரு மளிகைக்கடையில்வேலைபார்க்கும் அவனிடம் ஒரே ஒரு ஓட்டை…
Keep readingவிதைத்தது முளைக்கும்!
இரண்டு நிமிடக்குடும்பக் கதை “விதைத்ததுமுளைக்கும்!” சொட்டுநீர்க்கதைஞர்:வ.தேனப்பன் பஞ்சாயத்துபோர்டுதேர்தல் முடிவுகளெல்லாம்அறிவிக்கப்பட்டது போன்ற பெரு மகிழ்ச்சி அந்தப் பெரியவீட்டில்எதிரொலித்தது! அந்த வீட்டுப் பெரியவருக்கு அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவை ஜாம்ஜாமென்று கொண்டாடுவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருந்தார்கள்! 1000 வாட்ஸ் பல்பைப்போலப் பிரகாசமாய் ஒளிவிட்ட பெரியவரின் முகம்,0 வாட்ஸ் பல்புபோலப்பொசுக்கென்று மாறியதற்குக் காரணம்,அவரது பெரியப்பா உள்ளே நுழைந்ததுதான்! “என்னப்பா! ஏற்பாடெல்லாம் தடபுடலா நடக்குது போல?!”என்று கேட்டார்! “ம்!” என்று ஒற்றைச் சொல்லைமட்டும்…
Keep readingஒரு கல் கரைகிறது!
இரண்டு நிமிடச்சாதனைக் கதை! “ஒரு கல்கரைகிறது!” சிற்பக்கதைஞர்:வ.தேனப்பன் ஒரே நேரத்தில் பத்து வேலைகளைப் பார்த்தமெய்யானந்த சுவாமிகளுக்குத்”தசாவதானச் சக்கரவர்த்தி!”என்ற பட்டத்தைக் கொடுப்பதற்கான பாராட்டுவிழா,ஏக தடபுடலாக நடந்தது! மெய்யானந்தர் ஒரு உண்மைவிளம்பி!எந்தஒளிவுமறைவுமின்றிப் பேசுபவர்.அவர் மனம் திறந்தார்,நன்றி உரையின் போது! “ஒரே நேரத்தில் பத்து வேலைகள் பார்ப்பதை நான் ரொம்பப் பெருமையாகக் கருதிக் கர்வப்பட்டேன்!நேற்று நான் தங்கியிருந்த வீட்டில்,அந்தக் குடும்பத்தலைவிக்கு நான்கு பிள்ளைகள்!படிப்பதைத் தவிர,வேறு எந்த ஒரு வேலையையும் அவர்கள் பார்ப்பதில்லை…
Keep readingஎமலோகத்தில் ஒரு போராட்டம்!
இரண்டுநிமிடச்சிரிப்புக் கதை “எமலோகத்தில்ஒருபோராட்டம்!” விசிட்டிங்கதைஞர்:வ.தேனப்பன் யோகி பாபு போல்பிறந்ததிலிருந்தேமுடிவெட்டிக்கொள்ளநேரமில்லாதஎமதர்ம ராஜா, அமேசான் காடுபோல் வளர்ந்த முடியைப் பிய்த்துக்கொண்டார்! எமலோகத்தில் ஏற்பட்ட திடீர் ஸ்ட்ரைக்கால்பூலோகம் போல் அது திமிலோகப்பட்டது! சித்திரகுப்த வம்சத்தினர் மேனுவலாகத் தீர்க்க தரிசனத்தோடு எழுதிவைத்தஜனன மரண பைல்களுக்குக் கார்பரேட்காரர்கள்தீ வைத்துக்கொளுத்திவிட்டுப் பிறப்பு,இறப்புக் கணக்குகளை கம்ப்யூட்டரைஸ் பண்ணிவிட்டார்கள்! அவ்வப்போது கம்பியூட்டர் நெட் ஒர்க்ஹேங் ஆனதால் எமதூதர்களால் சரியாகச் செயல்பட முடியவில்லை! இப்போது வெளி கிரக சதியால்,மெயின் சி…
Keep readingநெஞ்சுக்குள் ஒரு ஏக்கம்!
இரண்டு நிமிடயதார்த்தக் கதை! “நெஞ்சுக்குள்ஒருஏக்கம்!” ஸ்டெதாஸ்கோப்கதைஞர்:வ.தேனப்பன் அரபு நாட்டுப் பாலைவனத்தில் ஐந்து ஆண்டுகள் சீனியர் ஆபீசர் வேலை பார்த்ததாகப் பொய்சொல்லி,ஒட்டகம் மேய்த்துக் காய்ந்து வந்த பிரபாகர்,தன் ஆசை மனைவியை எங்கெங்கெல்லாம் கூட்டிச்செல்ல வேண்டும்,எப்படியெல்லாம் சந்தோஷ வானில் பறக்கவேண்டும் என்றரகசியத் திட்டத்தோடுவந்து சேர்ந்தான்! மனைவி சம்யுக்தாவின் முகத்தில்,ஐந்து வருடஏக்கமுமில்லை!ஆனந்தத்தை வரவேற்கும் உற்சாகமுமில்லை!! காரணம் கேட்டான் பிரபாகர்! “இந்த வீட்டுல,ஒண்ணு உங்க அம்மா இருக்கணும்!இல்லை,நான் இருக்கணும்!தினசரி தீராத சண்டை!அதுனால.நீங்க வந்ததும்,முதியோர்…
Keep readingநம்மை நோக்கிப் பாயும் தோட்டா!
இரண்டு நிமிடசீரியல்(ஸ்) கதை! “நம்மை நோக்கிப்பாயும் தோட்டா!” எபிசோட்கதைஞர்:வ.தேனப்பன் “எம் பொண்டாட்டியை நீங்கதான் காப்பாத்தணும்,டாக்டர்!”என்று கையெடுத்துக்கும்பிட்டார் மல்டி மில்லியனர் மனோகர்சிங்! “எனி திங் சீரியஸ்?”என்று கேட்டார் அவரது நெடுநாளைய நண்பர் டாக்டர் ஐயப்பன்! “அநேகமா அவளுக்குஹார்ட் அட்டேக் சீக்கிரமாவே வந்திடும்போலிருக்கு!” “வந்தா …அப்போ பாத்துக்கலாம்!டோண்ட் ஒரீ!அதெப்படி கண்பர்மா ஹார்ட் அட்டேக் வரும்னு சொல்றீங்க?” “டீ வி யில வார எல்லா சீரியல்களையும் ஒன்னுவிடாமப் பாக்குறா!அதுல வார கதாபாத்திரங்கள்…
Keep readingபயங்கர வியாதி!
இரண்டு நிமிடமனோதத்துவக் கதை “பயங்கரவியாதி!” 4D ஸ்கேன்கதைஞர்:வ.தேனப்பன் காலையில் எழுந்தவுடன் தீபிகாவால் பல் விளக்க முடியவில்லை! வலது கையை உற்றுப் பார்த்தாள்!ஆள் காட்டி விரலும்,கட்டை விரலும் வீங்கிப்போய் பயங்கரமாக வலித்தது! “மாமா!என் கையைப் பாருங்களேன்! ஏன் இப்படி திடுதிப்னு வீங்கிப் போச்சூ?”என்று கேட்டாள். மாமா உற்றுப் பார்த்துவிட்டுச் சொன்னார்:”அடடா!இது முடக்குவாதத்தோட அறிகுறீம்மா!உடனேஎக்ஸ் ரே,ஸ்கேன் எடுக்கணும்!தேவைப்பட்டா ஈ சி ஜி யும் எடுத்துப் பாத்திடுறது நல்லதும்மா!”என்றார். “உங்களுக்குக் கொஞ்சம்கூட…
Keep readingFollow My Blog
Get new content delivered directly to your inbox.
